மதுரையில் 5 மாதத்திற்கு முன்பு  காணாமல் போன குழந்தை தென்காசியில் மீட்பு

by Editor / 30-06-2021 08:40:07pm
மதுரையில் 5 மாதத்திற்கு முன்பு  காணாமல் போன குழந்தை தென்காசியில் மீட்பு

 

மதுரையில் ஐந்து மாதத்திற்கு முன்பு காணாமல் போன குழந்தை மீட்கப்பட்டதோடு, குழந்தை கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
கல்மேடு பகுதியில் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த வானவராயன், சிவகாமி தம்பதியின் மூன்றரை வயது பெண் குழந்தையான பவித்ரா கடந்த 5 மாதங்களுக்கு முன் காணால் போனார். அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து குழந்தையைத் தேடி வந்தனர். இந்நிலையில்,குழந்தையை கடத்திய பரமன், மீனா உள்ளிட்ட 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில், தென்காசியிலுள்ள ராமர் என்பவரிடம் குழந்தையை ஒரு லட்சத்து 20,000 ரூபாய்க்கு விற்றதாக தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து தென்காசி விரைந்த போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 5 மாதத்திற்கு பின் குழந்தையை கண்ட பெற்றோர், அன்போடு அரவணைத்ததோடு, கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

 

Tags :

Share via