எலி கடித்த பெண்ணுக்கு ரூ.20,000 இழப்பீடு
கோழிக்கோடு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், ரயிலில் பயணம் செய்யும் போது எலி கடித்த பெண் பயணிக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்க இந்திய ரயில்வேக்கு உத்தரவிட்டுள்ளது. புகார்தாரரான சோரோட்டைச் சேர்ந்த சாலி ஜேம்ஸ் என்பவர் 2016 ஆம் ஆண்டு கச்சிகுடாவிலிருந்து வடகரா வரையிலான தனது ரயில் பயணத்தின் போது எலி கடியால் பாதிக்கப்பட்டார். அதிகாலை 3 மணியளவில் அவர் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, எலி ஒன்று அவரது இடது கையை கடித்துள்ளது. ரயில்வேயின் அலட்சியம் மற்றும் தரமற்ற சேவையால் புகார்தாரர் எலிக்கடிக்கு ஆளானதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
Tags :