காவல் நிலையத்திற்கு சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை வேண்டும் மு.க.ஸ்டாலின்

by Staff / 19-01-2023 05:30:33pm
காவல் நிலையத்திற்கு சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை வேண்டும் மு.க.ஸ்டாலின்

காவல் நிலையத்திற்கு சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ஏற்பட வேண்டும் - சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரை.மாதாந்திர ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி விசாரணை நிலையை கண்காணிக்க வேண்டும்;சிறப்பாக பணியாற்றும் காவலர்களை ஊக்குவிக்க வேண்டும்; மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் முக்கிய தகவல்களை கொண்டு முழுமையாக கண்காணிப்போடு செயல்பட வேண்டும். சார்ஜ் ஷீட் பைல் பண்ணுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதில் தாமதம் காணப்பட்டால் நீதிக்கு நாம் செய்யும் பிழை. காவல் கண்காணிப்பாளர்கள், களப்பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல வேண்டும். கிராம, நகர மக்கள் அமைப்புகளுடன் அவ்வப்போது கலந்துரையாட வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 

Tags :

Share via