உடல் நசுங்கி சிறுவன் பலி

by Staff / 25-01-2023 11:45:31am
உடல் நசுங்கி சிறுவன் பலி

கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூரில் கடந்த தினம் பெரும் துயர சம்பவம் நடந்துள்ளது. சையது முகமது பெரோஸ் (34) என்பவர் சில நாட்களுக்கு முன்பு புதிய கார் வாங்கியுள்ளார். காரை ஸ்டார்ட் செய்ய முயன்ற போது அந்த வழியாக ரைபுதீன் (8) என்ற சிறுவன் சைக்கிளில் வந்தார். சிறுவன் மீது கார் மோதியதில் காருக்கும் வீட்டின் சுவருக்கும் இடையே நசுங்கி உயிரிழந்தார். உடனடியான சிறுவனை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கோர சம்பவம் மனதை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.

 

Tags :

Share via