லாரி மோதி காவலர் பரிதாப பலி
தெலுங்கானா மாநிலம் மெட்சல் காவல்நிலைய பகுதியில் புதன்கிழமை ஒரு பேரதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கந்தலக்கோயா என்ற பகுதியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஊர்க்காவல்படை வீரர் சீனிவாஸ் அவ்வழியாக வந்த லாரியை நிறுத்த முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது லாரி மோதியது. இதில் சீனிவாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். இந்த கோர சம்பவம் மனதை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.
Tags :