ஹெலிகாப்டரில் இருந்து கோபுர கலசங்களுக்கு மலர் தூவ ஏற்பாடு

by Editor / 26-01-2023 08:16:16pm
ஹெலிகாப்டரில் இருந்து கோபுர கலசங்களுக்கு மலர் தூவ ஏற்பாடு

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் நாளை நடைபெறவுள்ள கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஹெலிகாப்டரில் இருந்து கோபுர கலசங்களுக்கு மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக கோவையில் இருந்து தனியார் நிறுவன ஹெலிகாப்டர் நாளை காலை 8 மணிக்கு பழனிக்கு வர உள்ளது. பின்னர் கும்பாபிஷேகம் நடைபெறும்போது ஹெலிகாப்டரில் இருந்து கோவில் ராஜகோபுரம், தங்க கோபுரம் மீது மலர்கள் தூவப்பட உள்ளது.
 

 

Tags :

Share via