ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமர் கோவிலை குண்டு வைத்து தகர்ப்பேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனால் போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பிரயாகராஜை சேர்ந்த மனோஜ்குமார் என்ற நபர் இந்த மிரட்டல் அழைப்பால் பீதியடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொலைபேசியில் அழைத்தவரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags :