நாடாளுமன்றம் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு
அதானி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் மீது விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. பொது நலனைக் கருத்தில் கொண்டு ஜேபிசி அல்லது பதவியில் இருக்கும் நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரினர். அவர்களின் கோரிக்கையை சபாநாயகர் மற்றும் அவைத் தலைவர் நிராகரித்தனர். உறுப்பினர்கள் முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளையும் சபாநாயகரும், அவைத் தலைவரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
Tags :