குழந்தை திருமணம் செய்த 1800 பேர் கைது
குழந்தைத் திருமணங்களில் ஈடுபட்டவர்களைக் குறிவைத்து அஸ்ஸாம் காவல்துறை வெள்ளிக்கிழமை பாரிய நடவடிக்கையைத் தொடங்கியது. சிறுமிகளை திருமணம் செய்த 1800 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஏற்கனவே 4,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த அதிரடி நடவடிக்கை இன்னும் 4 நாட்களுக்கு தொடரும் என்று முதல்வர் ஹிமந்த பிஸ்வசர்மா தெரிவித்தார். 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்பவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags :