ஏடிஎம் கொள்ளையர்களுக்கு சிறை

by Staff / 18-02-2023 05:15:10pm
ஏடிஎம் கொள்ளையர்களுக்கு சிறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் இயந்திரங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.72.79 லட்சம் பணத்தை கொள்ளையடித்த வழக்கில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரிஃப், ஆஜாத் என்ற இருவரை துப்பாக்கி முனையில் தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர். டெல்லியில் இருந்து விமானம் மூலம் அழைத்துவரப்பட்ட அவர்களை திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பின், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via