டெல்லியில் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்
டெல்லி ஜேஎன்யு-வில் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது பாஜகவின் வலதுசாரி மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் எஸ்எப்ஐ உள்ளிட்ட இடதுசாரி மாணவர் அமைப்பினர் தர்ஷன் சொலான்கி மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றுள்ளனர். அவர்கள் மீது ஏபிவிபியை சேர்ந்தவர்கள் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
Tags :