வெளிநாட்டு பெண் மீது ரயில்வே கான்ஸ்டபிள் அத்துமீறல்

by Staff / 04-03-2023 12:12:29pm
வெளிநாட்டு பெண் மீது ரயில்வே கான்ஸ்டபிள் அத்துமீறல்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் ரயில்வே கான்ஸ்டபிள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பெண்ணின் காதலன் பக்கத்தில் இருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் அப்பெண்ணை உடல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். டெல்லியில் இருந்து லக்னோ செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குற்றவாளியான கான்ஸ்டபிள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் உத்தரப்பிரதேசத்தின் ஃபிரோசாபாத் ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.
 

 

Tags :

Share via