மேகதாது அணை விவகாரம்- துரைமுருகன் டெல்லி சென்றார்.

by Admin / 05-07-2021 04:42:01pm
மேகதாது அணை விவகாரம்- துரைமுருகன் டெல்லி சென்றார்.

 

கர்நாடகா அரசு காவிரியின் நடுவே மேகதாது அணையை கட்டுவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  எழுதிய கடிதத்தில் மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க வேண்டாம் என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்து மு.க.ஸ்டாலின் எடியூரப்பாவுக்கு எழுதிய கடிதத்தில் அணை கட்டுவதை ஏற்க முடியாது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். நாளை மத்திய நீர்வளத்துறை மந்திரி செகாவத்தை அவர் சந்தித்து பேசுகிறார். அப்போது மேகதாது அணை கட்டப்படுவதால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி மத்திய மந்திரியிடம் அமைச்சர் துரைமுருகன் எடுத்து கூற உள்ளார்.

 

Tags :

Share via