குளத்தில் குளிக்கச் சென்ற முதியவர் தண்ணீரில் மூழ்கி பலி

by Staff / 22-02-2023 03:47:56pm
குளத்தில் குளிக்கச் சென்ற முதியவர் தண்ணீரில் மூழ்கி பலி

கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர் தங்க நாடார் (வயது 72). இவர் சோடா கலர் வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று மாலை 4 மணி அளவில் விஜய நாராயணபுரத்தில் உள்ள வாச்சான்குளத்தில் குளிப்பதற்காக தங்கநாடார் சென்று உள்ளார்.குளிக்க சென்ற அவர் வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பி வராததால் அவரது உறவினர்கள் மற்றும் ஊரில் உள்ள பொதுமக்கள் அவரைத் தேடி வாச்சான்குளத்துக்கு சென்றனர். அங்கு அவர் குளத்தில் பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.உடனே இதுபற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்குவிரைந்து சென்றுபிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.அவரது உடலைபிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குளத்தில் மூழ்கி பலியான தங்கநாடாருக்கு மனைவியும் ஒரு மகனும் 4 மகள்களும் உள்ளனர்.

 

Tags :

Share via