9 மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

by Editor / 05-09-2021 12:00:36pm
9 மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து, 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. சமீபத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால், தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட திமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் , ஒன்றிய செயலாளர்களுடன் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் காலை ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

 

Tags :

Share via