சாராயம் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது

by Staff / 19-10-2023 12:52:09pm
சாராயம் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது

பனமரத்துப்பட்டி அருகே அடிமலைப்பட்டி பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பனமரத்துப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையிலான போலீசார் அடிமலைபட்டி பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அடி மலைப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பழனிச்சாமி (55), பெரியசாமி (26) ஆகியோர் தங்களது தோட்டத்தில் சுமார் 3 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பழனிச்சாமி, பெரியசாமி ஆகிய இருவரையும் போலிசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via