வயநாடு நிலச்சரிவு: 4 பேர் உயிருடன் மீட்பு

by Staff / 02-08-2024 02:02:04pm
வயநாடு நிலச்சரிவு: 4 பேர் உயிருடன் மீட்பு

வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை 4வது நாளாக மீட்புகுப் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், இன்று நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை 318 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 296ஆக உயர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, வயநாட்டிற்கு விஞ்ஞானிகள் ஆய்விற்கு செல்லக்கூடாது, நிலச்சரிவு குறித்து கருத்துக்களை பகிரக்கூடாது என அம்மாநில அரசு உத்தரவிட்டது.

 

Tags :

Share via