சுயதொழில் கடனுதவியை கனிமொழி எம்பி எம்பி வழங்கினார்
எட்டயபுரம் அருகே சோழபுரம், கன்னக்கட்டை, புங்கவர்நத்தம், போடுபட்டி மற்றும் டி. சண்முகபுரம் ஆகிய கிராமங்களில் மக்கள் களம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மார்க்கண்டேயன் எம். எல். ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார்.பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அடிப்படை பிரச்சினை மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து 2 பயனாளிகளுக்கு ரூ. 2 லட்சம் விபத்து நிவாரண தொகைக்கான காசோலை, 2 பயனாளிகளுக்கு ரூ. 4000 கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை என மொத்தம் 94 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 8 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 46 லட்சத்து 34 ஆயிரம் சுயதொழில் கடனுதவிகளையும் அவர் வழங்கினார்.
Tags :