மகள் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே புங்கங்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி இவருடைய மனைவி மலர்கொடி வயது 50 இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். கடந்த இரண்டு வருடத்திற்கு முன் மகள் இறந்து விட்டார்.அந்த மன வருத்தத்தில் இருந்த மலர்கொடி நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து செல்லப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :