முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சந்தீப் யாதவ் துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில், அவரது தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், சனிக்கிழமை யோகிக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் சந்தீப் சேர வேண்டியிருந்த நிலையில், இந்த துயரம் அரங்கேறியுள்ளது.
Tags :