திமுக தலைவர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு வந்த கட்சி நிர்வாகி மயங்கி விழுந்து உயிரிழப்பு..
திமுக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து பேராவூரணி நகர பொருளாளர் முகமது பாரூக் (57 வயது) கட்சியினருடன் தனியார் பேருந்தில் இன்று காலை புறப்பட்டு சென்னைக்கு வந்துள்ளார். மாலை 5 மணி அளவில் ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு அருகில் பேருந்தை நிறுத்திவிட்டு கட்சியினருடன் முகமது பாரூக் இறங்கி உள்ளே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முகமது பாரூக் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அப்போது அங்கு உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு வந்த கட்சி நிர்வாகி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த முகமது பாரூக் பேராவூரணியில் கவுன்சிலராக ஏற்கெனவே இருந்துள்ளார். தற்போது இவரது மனைவி கவுன்சிலராக இருக்கிறார்.
Tags :