பாஜக எம்எல்ஏ மகன் கைது
கர்நாடகாவில் ஆளும் பாஜகவுக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. 40 சதவிகிதம் கமிஷனை பெறுகிறார் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை மீது ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில் பாஜக எம்எல்ஏ விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார். மேலும், அவரது அலுவலகத்தில் மேலும் ரூ.40 லட்சம், வீட்டில் ரூ. 6 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெள்ளிக்கிழமை காலை போலீசார் பிரசாந்தை கைது செய்தனர். இந்த ஆண்டு கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :