வழக்கறிஞர் கொலை: போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளிக்கு துப்பாக்கி சூடு.
தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார் கொலையில் முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷை தட்டப்பாறை அருகே காட்டுப்பகுதியில் காவல்துறை கைது செய்ய முயலும் போது காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப ஓட முயன்றதில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளி ஜெயக்குமார் காலில் காயம்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். காயம் அடைந்த உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்புஏற்பட்டுள்ளது.
Tags :