தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிய நிலையில் 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிய நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில், கிழக்கு திசை மாறுபாடு காரணமாக 14,15,16-ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும்,16ம் தேதி அன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
Tags : சென்னை வானிலை ஆய்வுமையம்