2ம் நாளாக பற்றி எரிந்து புகை மூட்டமாக மாறிய நகர்
கொடைக்கானல் வனத்தில் இரண்டாவது நாளாக பற்றி எரிந்த காட்டுத்தீயால் நகரே புகை மூட்டமாக மாறியது.
திண்டுக்கல்மாவட்டம் கொடைக்கானல் சிட்டி வியூ வனப்பகுதியில் முன்தினம் இரவு காட்டுத் தீ பற்றியது. வன நிலங்கள் தீக்கிரையாகின. அரிய வகை மரங்கள், விலங்குகள் பலியாகின. உயிர்தப்பிய வனவிலங்குகள் விவசாய நிலங்களில் தஞ்சமடைந்தன. இதனால் மனித, விலங்கு மோதல் ஏற்பட்டுள்ளது. சூறைக்காற்று , வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். அதற்காக நவீன தொழில்நுட்பமின்றி இலை உள்ளிட்டவைகளே பயன்படுத்தப்படுகிறது. நேற்று 2 வது நாளாக கொளுந்து விட்டு எரிந்த தீயால் கொடைக்கானல் நகரில் புகை மூட்டம் சூழ்ந்து சுற்றுச்சூழல் பாதித்துள்ளது
Tags :