மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த  யானை - கொடூரமான வீடியோ காட்சி

by Editor / 19-03-2023 10:16:07am
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த  யானை - கொடூரமான வீடியோ காட்சி

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஏரிக்கரையில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டுயானையை விவசாயிகள் விரட்டியுள்ளனர்.பொதுமக்களின் சப்தத்தால் யானை மீண்டும் வனப்பாகுதிக்குள் செல்ல அந்தப்பாகுதியிலுள்ள ஏரிக்கரையில்  இருந்து மேலே ஏறும் போது தாழ்வாக சென்ற மின்கம்பியா..இல்லை..மின்சாரம் பாய்ச்சப்பட்ட மின் வெளியா எனத்தெரியவில்லை..ஆனால் மின்சாரம் பாய்ந்து ஆண் யானை அலறலோடு சரிந்துவிழுந்து உயிரிழந்தது.இந்த காட்சிகளை அந்தப்பாகுதிகளில் திரண்டுநின்று யானையை கட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுப்பட்டவர்கள் தங்ககளது அலைபேசியில்பதிவு செய்து தற்போது சமூக வலைத்தளங்களில்  பரப்பி வருகின்றனர்.அந்தவீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த  யானை - கொடூரமான வீடியோ காட்சி
 

Tags :

Share via