முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார் கவுன்சில் நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

by Admin / 19-03-2023 05:09:04pm
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார் கவுன்சில் நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை,தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், கௌரவ செயலாளர்ஆர்.அய்யாவு மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வழக்கறிஞர்கள் சேம நல நிதியை 7 இலட்சம் ரூபாயிலிருந்து 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தியதற்காகவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலிற்கு ரூ. 20 கோடியை மூலதன வைப்பு தொகையாக அளித்தமைக்காகவும், சென்னையில் நீதிமன்ற கட்டடங்களை அமைக்க 7 ஏக்கர் நிலம் நிதி ஒதுக்கீடு செய்தமைக்காகவும் நன்றி தெரிவித்தனர்.

 

Tags :

Share via