தமிழ்நாடு என்றாலே செங்கோல் தான்: ராஜ்நாத் சிங்

by Staff / 16-04-2024 04:13:05pm
தமிழ்நாடு என்றாலே செங்கோல் தான்: ராஜ்நாத் சிங்

நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதி பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து மத்திய மாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் உலகம் முழுவதும் தமிழ் கலாசாரம் மோடியால் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார். மேலும் தமிழ்நாடு என பேசும்போது தனக்கு முதலில் நினைவுக்கு வருவது செங்கோல் தான் என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி பாடுபட்டுக்கொண்டிருக்கிறார் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via
Logo