கடையம் அருகே பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் விரட்டியடிப்பு

by Editor / 20-03-2023 08:29:15am
கடையம் அருகே பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் விரட்டியடிப்பு

தென்காசி மாவட்ட மேற்குதொடர்ச்சிமலைப்பகுதிகளில் ஏராளமான யானைகள் தற்போது வசித்துவருகின்றன.மேலும் மேற்குதொடர்ச்சிமலைப் பகுதிகளில் மழையில்லாத நிலைய நீடித்துவருவதால் வனப்பகுதியில் வசிக்கும் யானைகள் உணவைத்தேடி மலைப்பகுதியை ஒட்டியுள்ள நிலங்களுக்குள் புகுந்து தனியார் தோட்டங்களிலுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.இதன் தொடர்ச்சியாக  கடையம் அருகே தர்மபுரமடம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏழு காட்டு யானைகள் குட்டியுடன் நுழைந்து அந்தப்பகுதியிலுள்ள நெல், தென்னை பயிர்களை சேதப்படுத்தியது. காவலில் இருந்த விவசாய தம்பதியினர் யானைக்கூட்டத்தை கண்டு  அலறி அடித்து உயிர் தப்ப ஓட்டமெடுத்தனர்.மேலும்சித்துகிறித்து தகவலறிந்துவந்த வனத்துறையினர் யானைக்கூட்டத்தை வனப்பகுதியில் விரட்டி அடித்தனர்.

 

Tags :

Share via