கோயில் வாசலில் எளியமுறையில் நடந்த 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள்

by Editor / 25-04-2021 10:58:46am
கோயில் வாசலில் எளியமுறையில் நடந்த 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள்

கொரோனாவைக் கட்டுப்படுத்த இன்று முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலின் முன் நடைபெற்றன. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏதுவாக, கோயில்களில் திருமணங்களை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கமும் அமலில் உள்ளது. இந்நிலையில், பல மாதங்களுக்கு முன் திட்டமிடப்பட்டிருந்த திருமணங்கள் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலின் முன் உள்ள சாலையில் நடைபெற்றது. அதிகாலை 4.30 மணியிலிருந்து 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதால் கோயிலுக்கு முன் உள்ள சாலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கோயில் வாசலில் எளியமுறையில் நடந்த 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள்

கொரோனாவைக் கட்டுப்படுத்த இன்று முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலின் முன் நடைபெற்றன. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏதுவாக, கோயில்களில் திருமணங்களை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கமும் அமலில் உள்ளது. இந்நிலையில், பல மாதங்களுக்கு முன் திட்டமிடப்பட்டிருந்த திருமணங்கள் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலின் முன் உள்ள சாலையில் நடைபெற்றது. அதிகாலை 4.30 மணியிலிருந்து 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதால் கோயிலுக்கு முன் உள்ள சாலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

 

Tags :

Share via