திருச்சி எஸ்.பி., வருணை சாடிய சீமான்

by Staff / 24-08-2024 01:41:38pm
திருச்சி எஸ்.பி., வருணை சாடிய சீமான்

என் மீது 138 வழக்குகள் உள்ளன; அதனை 200 ஆக்குவதற்கு திருச்சி எஸ்.பி., முயற்சிக்கிறார் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருவாரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் அதிகாரத்தை எதிர்த்து பேசி வருபவன். அந்த அதிகாரத்தில் ஒரு புள்ளிதான் திருச்சி எஸ்.பி. என் மீதான வழக்குகளை 200 ஆக்குவதற்கு முயற்சிக்கிறார். ஐபிஎஸ் ஆக வேலை பார்க்க வேண்டும். திமுக ஐடி விங் போல செயல்படக்கூடாது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via