பாஜகவுடன் பவன் கல்யாண் கட்சி கூட்டணி
தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 3-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தெலுங்கானாவில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. இந்நிலையில், நடிகர் பவன் கல்யாண் பாஜகவுடன் சேர்ந்து கூட்டணியில் தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசிய பாஜக எம்.பி.லக்ஷ்மன், ஜனசேனா தலைவர் பவன் கல்யாணுக்கும், பாஜகவிற்கும் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பதை விரைவில் அறிவிப்போம் எனவும் கூறியுள்ளார்.
Tags :