நாய்க்கறி சர்ச்சை - ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

by Staff / 06-11-2023 11:19:13am
நாய்க்கறி சர்ச்சை - ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

நாகாலாந்து மக்கள் நாய் கறி உண்பார்கள் என திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியதற்கு ஆளுநர் ரவி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்தியாவை பெருமைப்படுத்தும் சமூகத்தை புண்படுத்த வேண்டாம் என கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள ஆர்.எஸ். பாரதி, 'நாகாலாந்து மக்கள் நாய்கறி உண்பது அவர்களின் கலாச்சாரம் என்பதனை கவுகாத்தி நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆளுநர் ரவி கூறுவது திசைதிருப்பும் முயற்சி. நான் தவறாக பேசவில்லை. ஆளுநர் தவறாக புரிந்து கொண்டுள்ளார்' என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via