காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல். 50 பேர் கைது.

by Editor / 25-03-2023 03:55:52pm
காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல். 50 பேர் கைது.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வாங்கி கொண்டு சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 50 பேரை காவல்துறை கைது செய்தனர்.

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி பெறப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் அரண்மனை வாசல் முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி பெற்று திடிரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via