100 நாள் வேலை திட்டத்தை முடக்க முயற்சி

by Staff / 06-11-2023 11:24:50am
100 நாள் வேலை திட்டத்தை முடக்க முயற்சி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், '100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.2.7 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். ஆனால், மத்திய பா.ஜ.க அரசு தற்போது வெறும் ரூ.60,000 கோடி தான் நிதி ஒதுக்கி உள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 21% நிதியை மத்திய அரசு குறைத்துள்ளது. கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

 

Tags :

Share via

More stories