மின்னல்தாக்கி ஒரே குடும்பத்தில் 2 பேர் பலி

by Editor / 30-03-2023 08:10:07am
மின்னல்தாக்கி ஒரே குடும்பத்தில் 2 பேர் பலி

கேரளாவின் கோட்டயம், முண்டகாயத்தில் புதன்கிழமை மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்தனர். முண்டகாயத்தைச் சேர்ந்த சுனில் (40) மற்றும் ரமேஷ் (35) ஆகியோர் மைத்துனர்கள். இவர்கள் ஒரு வீட்டை விற்பனை செய்வதற்காக, மாலை 4 மணியளவில் வெளியே நின்று கொண்டிருந்தனர். அப்போது பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் ஏற்பட்டது.இதில் அவர்களை மின்னல் தாக்கியதில் இருவரும் மயங்கி விழுந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது பரிதாபமாக பலியாயினர்.கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஏப்ரல் 2ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via