கஞ்சா பதுக்கிய நபர் கைது
சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தனிப்படை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது தேவூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கே. மேட்டுபாளையம் பகுதியில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை கண்டதும் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது அவர் தேவூர் அருகேயுள்ள சோழ கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (எ) பூவா கவுண்டர்(55) என்பதும் அவர் 2. 4 கிலோ கஞ்சா வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது இதனையடுத்து தனிப்படை போலீசார் அவரை தேவூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணைக்கு பிறகு கைது செய்து வழக்கு பதிவு செய்து சங்ககிரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags :