குழிக்குள் விழுந்த 25 பக்தர்கள்

by Staff / 30-03-2023 02:52:21pm
 குழிக்குள் விழுந்த 25 பக்தர்கள்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மகாதேவ் கோவிலில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது இந்த விபத்து நடந்துள்ளது. தரைப்பகுதி இடிந்து விழுந்து 25 பக்தர்கள் குழிக்குள் விழுந்தனர். இந்த விபத்தில் 10 பக்தர்கள் பலத்த காயம் அடைந்தனர். கோவில் நிர்வாகத்தினர், பொதுமக்கள், மீட்புப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

 

Tags :

Share via