கஞ்சா விற்பனை தாராளமாக நடக்கிறது

by Staff / 30-03-2023 03:01:46pm
கஞ்சா விற்பனை தாராளமாக நடக்கிறது

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெறுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். இந்நிலையில், போதைப்பொருள் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வது வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழக மக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாகவும் கூறினார். இதனைதொடர்ந்து, அதிமுக ஆட்சியில் அம்மா உணவகத்தில் ருசியான உணவு வழங்கப்பட்டது, ஆனால் திமுக ஆட்சியில் உணவு தரமாக இல்லை, ருசியில்லாத உணவு வழங்கப்படுவதால், அங்கு சாப்பிட வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் கூறினார்.

 

Tags :

Share via