அசாம் மாநிலத்தில் தொடரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை ஒரு பெண் உள்பட 3 பேர் பலி

by Staff / 16-05-2022 01:52:52pm
அசாம் மாநிலத்தில் தொடரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை ஒரு பெண் உள்பட 3 பேர் பலி

அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்த நிலையில் சுமார் 57 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சசச நகோன் திமா ஹசாவ்  உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள 222 கிராம மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.தொடரும்  கன மழையால் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு ரயில் தண்டவாளங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ராணுவம் துணை ராணுவம் தீயணைப்புத்துறை யுடன் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம்  மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
 

 

Tags :

Share via