ராகுல் காந்தி இன்று குஜராத் சூரத் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல்

by Admin / 03-04-2023 08:29:37am
ராகுல் காந்தி  இன்று குஜராத் சூரத் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல்

 காங்கிரஸ் கட்சியினுடைய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது மோடி என்கிற சமூகத்தைப் பற்றி திருடர்கள் என்று பேசியதாக அவர் மீது குஜராத் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது அது தீர்ப்பின்படி அவருக்குஇரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது இதனை தொடர்ந்து பாராளுமன்ற செயலகம் அவருடைய வயநாடு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்தது.. இதனால் இந்தியாவெங்கும் காங்கிரஸ் கட்சியினர், பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தினார் இந்நிலையில் அவருக்கு சூரத் நீதிமன்றம் மேல் முறையீடு செய்வதற்காக ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர் இன்று குஜராத் சூரத் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்

 

 

Tags :

Share via