திருச்சியில் 3 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை நிறைவு
திருச்சியில் 3 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை நிறைவு பெற்றது. திருச்சி கிராப்பட்டியில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் 3 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை இன்று நிறைவு பெற்றது. கடந்த 5ஆம் தேதி இரவு சோதனை தொடங்கிய நிலையில், இன்று அதிகாலை சோதனை முடிந்தது. இந்த நடவடிக்கையின் போது கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரம் என்பதால் பல்வேறு இடங்களில் தொடர் சோதனை நடக்கிறது.
Tags :