கடற்கரையில், 2500க்கும் மேற்பட்டோர் இன்று நிர்வாணமாக நின்றதால் பரப்பரப்பு.

by Editor / 26-11-2022 11:17:59pm
 கடற்கரையில், 2500க்கும் மேற்பட்டோர் இன்று நிர்வாணமாக நின்றதால் பரப்பரப்பு.

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி நகரத்தின் போண்டி கடற்கரையில், 2500க்கும் மேற்பட்டோர் இன்று நிர்வாணமாக கூடிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சரும புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வருவதாகவும், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இவ்வாறு அனைவரும் சருமத்தை வெளிப்படுத்து வகையில் நிர்வாணமாக நின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தாங்கள் இந்த நிகழ்வில் விருப்பப்பட்டே கலந்துகொண்டதாகவும்தெரிவித்துள்ளனர்.ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக நிர்வாணமாக பலரும் கடற்கரையில் இருப்பதற்கான அனுமதியும் அந்த நாட்டு அரசால் மக்கள் விழிப்புணர்வு நிகழ்வு என்பதால் வழங்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via