கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜை விழா.

by Staff / 01-10-2025 10:48:29am
 கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜை விழா.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கூத்தனூரில் தென் இந்தியாவிலேயே மகா சரஸ்வதி ஆலயம் தனி அமைந்துள்ளது. இங்கு தான் சரஸ்வதிக்கு தனி ஆலயம் அமைந்துள்ளது. ஒட்டக்கூத்தர் என்னும் தமிழ் புலவருக்கு சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்க பெற்று ஒட்டக்கூத்தர் வழிபட்டதால் இந்த ஊர் கூத்தனூர் என பெயர் பெற்றது

இவ்வாறு வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் தேர்வுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பேனா, பென்சில், நோட்டு புத்தகம், வெள்ளை தாமரை கொண்டு தேர்வில் வெற்றி பெற வேண்டி இந்த அம்மனை தரிசித்து செல்வது வழக்கம். மேலும் ஆண்டுதோறும் இந்த கோவிலில் சரஸ்வதி பூஜை விழா வெகு விமர்சையாக நடைபெறும்.இந்த வருட விழாவை முன்னிட்டு சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை சிறப்பு அலங்காரம் செய்து சரஸ்வதி பூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது இந்த. சரஸ்வதி பூஜை விழாவில் திருவாரூர் மட்டுமல்லாது தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.மேலும் பாதுகாப்பு பணியில் பேரளம் காவல் ஆய்வாளர் கோகுலகண்ணன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர் கோவில் நிர்வாகம் சார்பில் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு குடிநீர் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை வித்யா ரம்பம் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது தமிழ் முதல் எழுத்தான அ என்ற எழுத்தை குழந்தைகள் நெல்மணிகளில் எழுதும் நிகழ்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :  கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜை விழா.

Share via