ரயில் மோதி வாலிபர் பலி

by Staff / 04-04-2023 12:04:01pm
ரயில் மோதி வாலிபர் பலி

ஆவடி அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், ஆவடி மாநகராட்சியின் தற்காலிக சூப்பர்வைசர் பரிதாபமாக பலியானர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அடுத்து சேக்காடு நாகராஜன் நகர் பகுதியை சேர்ந்த ஆதிஹரிஷ் (25). தூய்மை இந்தியா திட்டத்தின் ஆவடி மாநகராட்சியில் தற்காலிக சூப்பர்வைசர் வேலை செய்து வந்தார்.இவர் நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டு, 7. 50 மணி அளவில் பட்டாபிராம் – இந்துக்கல்லூரி இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, வேகமாக வந்த, சென்னையில் இருந்து பெங்களூர் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், அவரது இரண்டு கை, கால் துண்டானது.உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via