பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் சேத்தியார்தோப்பு, வடசேரி, மைக்கேல்பட்டி ஆகிய பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் கொடுத்துள்ளது. இந்நிலையில், “நிலக்கரி ஏல ஒப்பந்த நடைமுறைகளில் இருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வேண்டும். இவ்விவகாரத்தில் அறிவிப்பு வெளியிடும் முன்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறவில்லை, மாநில அரசிடம் கலந்தாலோசனையும் நடத்தப்படவில்லை, ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது” என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Tags :