மருத்துவரை தாக்கிய 31 பேர் மீது வழக்கு பதிவு போலீசார் விசாரணை

by Staff / 08-04-2023 04:30:10pm
மருத்துவரை தாக்கிய 31 பேர் மீது வழக்கு பதிவு  போலீசார் விசாரணை

காரைக்காலில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வரும் ஞானமணி என்பவர் அம்பகரத்தூரில் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அவர் கிளினிக்கில் இருந்தபோது அங்கு வந்த சுமார் 31 பேர் அவரை தாக்கியதாகவும், தொடர்ந்து கிளினிக் நடத்தினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி அவரை கிளினிக்கிலிருந்து வெளியே இழுத்து தள்ளியதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த அவர், காரைக்காலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது புகாரின்பேரில் திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via