துருக்கியில் பஸ் விபத்து.. 12 பேர் உயிரிழப்பு
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி மிரட்டி நகரின் சாலையில் சென்று கொண்டிருந்த மினி பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்து விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 26 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்த விசாரணையில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பேருந்து உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Tags :