மதுரை முதியவர் சடலமாக மீட்பு

மதுரையில் விளக்குத்தூண் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள பூங்காவில் முதியவர் ஒருவர் சடலமாக கிடப்பதாக விளக்குத்தூண் போலீசாருக்கு தகவல் கிடைத்தது உடனடியாக அங்கு சென்று போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் முதியவர் யார் என்பதும் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
Tags :