சமையல் செய்தபோது சேலையில் தீப்பற்றி மூதாட்டி பலி

by Staff / 23-04-2023 02:02:42pm
சமையல் செய்தபோது சேலையில் தீப்பற்றி மூதாட்டி பலி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர். வடக்கு தெருவில் வசிப்பவர் சுப்பையா மனைவி சின்னத்தாய் (75). இவர் மண்ணெண்ணெய் கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென அவரது சேலையில் தீப்பற்றியுள்ளது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதாதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via